×

கேரளாவில் 2 குழந்தைகளை கொன்று வங்கி பெண் மானேஜர் கணவருடன் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு குற்றிக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சபீஷ் (37). இவரது மனைவி ஷீனா (35). கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கண்ணூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மானேஜராக பதவியில் சேர்ந்தார். இந்த தம்பதிக்கு ஹரிகோவிந்த் (6), ஸ்ரீவரதன் (2) என்ற 2 குழந்தைகள் இருந்தன. நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் ஷீனாவின் தந்தை நாராயணன் மகளுக்கு போன் செய்து உள்ளார். பலமுறை அழைத்தும் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த நாராயணன், மலப்புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்து உள்ளனர். அப்போது 4 பேரும் இறந்த நிலையில் காணப்பட்டனர். சபீஷும், ஷீனாவும் படுக்கை அறைகளில் தூக்கு போட்டு இறந்த நிலையிலும், குழந்தைகள் 2 பேரும் படுக்கையில் இறந்த நிலையிலும் காணப்பட்டனர். குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மலப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர்.

The post கேரளாவில் 2 குழந்தைகளை கொன்று வங்கி பெண் மானேஜர் கணவருடன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kerala Thiruvananthapuram ,Sabeesh ,Kozhikode's ,Kurikatoor ,Kerala ,Sheena ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது